மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி உதவியாளர், உதவி தொழில்நுட்ப அதிகாரி, நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 2,049 பணியிடங்களுக்கு ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையவர்கள் ssc.nic.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். நாளை கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும்.