தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் வறுமையை காரணம் காட்டி யாரும் பள்ளிக்கூடத்திற்கு வராமல் இருந்துவிடக்கூடாது என்பதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் யாரையும் கைவிட்டுவிடாதபடி அனைவரையும் கல்வித்திட்டத்துக்குள் கொண்டு வருகிறோம். நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.