பா.ஜக. தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை, தனித்து போட்டியிடவே விருப்பம் என ஓப்பனாக பேசி இருந்தார். இது பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்? என்ற முடிவை அதிமுக தான் எடுக்கும் என்று ADMK முன்னாள் அமைச்சர் OS மணியன் கூறியுள்ளார்.

இன்று காலை சென்னையில் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது “யாருடன் கூட்டணி?, யாருக்கு எத்தனை சீட்டு வழங்க வேண்டும் என்பதை அதிமுகவே தீர்மானிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கூட்டணியில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியேற இருப்பதாக பேசப்படும் நிலையில், இவரது கருத்து தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.