பட்டியலின இளைஞரை தாக்கிய கும்பலை காவல்துறை தற்போது தேடி வருகிறது.

நெல்லை மாவட்டம் ஆட்சிமடத்தில் பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. வழிமறித்து சாதி பெயரைக் கேட்டு கற்களால் தாக்குதல் நடத்தி உள்ளது ஒரு கும்பல். கடந்த 30ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து தற்போது தெரிய வந்திருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டியலின இளைஞரை தாக்கிய கும்பலை தற்போது காவல்துறை தேடி வருகிறது.