தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உணவு தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி ஸ்வீட் மற்றும் காரம உள்ளிட்ட உணவு தயாரிப்புக்கு பொட்டலமிட்ட எண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும். உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வைக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.