திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியலின இளைஞர்கள் கடந்த 30ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் பரப்பரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்பினரும்,  அரசியல் கட்சியினரும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் புறநகர் பகுதியாக  இருக்க கூடிய ஆட்சிமடப்பகுதியைச் சேர்ந்த பட்டியலில் சமூகத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் இவர் வேலை முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது வழிமறித்த மர்ம கும்பலானது ஜாதி பெயரை கேட்டு, அவரை சரமாரியாக கல்லால் தாக்கி காயம் ஏற்பட்டியாகவும்,

இதனால் அவர் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவலாக வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  30ஆம் தேதி தான் இரு இளைஞர்கள் இதே போல தாக்கப்பட்டனர். அதே நாளில் மீண்டும் ஒரு இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரங்கள்  தெரியாத காரணத்தால் ? சிவந்திபட்டி காவல்துறையினர் மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் பல்வேறு வகையான கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறி  வருவது, அந்த மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் அதை சுற்றி இருக்கக்கூடிய மற்ற மாவட்ட மக்கள் மத்தியிலும் பெரும் அச்ச உணர்வு ஏற்படுத்திருக்கின்றது