நடப்பாண்டில் வேதியல் துறையில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மெளங்கி பவெண்டி, லுயிஸ்  ப்ரூஸ், அலெக்ஸி எக்கிமோவ் ஆகிய விஞ்சானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.