மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கின்றார்.

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் வழங்குவது குறித்து அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசிடம் வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை தமிழக அரசு கோரி  இருக்கும் நிலையில் மத்திய நிதியமைச்சரோடு  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு நடந்து இருக்கின்றார். இந்த சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் வட மாவட்டங்களாகட்டும், தென் மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான நிவாரணத் தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரி இருந்தது.  இந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு  இன்று நிதி அமைச்சரால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிவாரணம் வழங்குவது குறித்து பேசி  இருப்பது குறிப்பிடத்தக்கது.