அமெரிக்க நாட்டில் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி என மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணிகள் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் மாயமான ஆம்புலன்ஸ் விமானம் மலைபாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மீட்புக் குழுவினர் உடனடியாக விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் விமானத்தில் பயணித்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் அங்கு ஏற்பட்ட குளிர்கால புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த விபத்து நடந்துள்ளதால் வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.