கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சகாயமாதா தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாஞ்ஜி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாஞ்ஜி மோட்டார் சைக்கிள் வடக்கு குண்டல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நாஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நான் செய்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.