கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.