பழனியில் நடிகை அமலா பால் வழிபாடு செய்திருக்கின்றார்.

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் அமலா பால் தற்போது அதோ அந்த பறவை போல, ஆடு ஜீவிதம், கிறிஸ்டோபர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அவர் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார்.

பழனியில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் அமலா பால் தனது குடும்பத்தினருடன் பழனியில் உள்ள முருகனை வழிபட்டிருக்கின்றார். மேலும் அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.