தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா சென்ற டிசம்பர் மாதம் தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் இவர்கள் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்ற நிலையில் மீண்டும் படபிடிப்பில் நடிக்க ஆரம்பித்திருக்கின்றார் ஹன்சிகா.

இதன் காரணமாக மும்பையில் இருக்கும் ஹன்சிகா தற்போது சென்னைக்கு வந்திருக்கின்றார். அவருக்கு ரோஜா பூ கொடுத்து உற்சாக வரவேற்பும் திருமண வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு மகள் தாய் வீட்டிற்கு வரும் உணர்வை இங்கு வந்தால் தருவதாக தெரிவித்தார். மேலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நந்தகோபால் இயக்கும் திரைப்படத்தில் இன்று முதல் நடிப்பதாகவும் கூறினார்.

மேலும் இந்த வருடம் எனது திரைப்படங்கள் மொத்தம் ஏழு வெளியாக உள்ளது. இது மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து ஒரு மாதம் சென்னையில் படபிடிப்பில் பங்கேற்க இருப்பதாகவும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இன்றைய காலத்தில் அனைவரும் சமம், கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி இருக்குது எனத் தெரிவித்திருக்கிறார்.