செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சி வசப்பட்டு அழுது இருக்கின்றார்.

உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக தீபிகா படுகோனின் காவி நிற நீச்சல் உடை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது படத்திற்கு விளம்பரமாக அமைந்தது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால் இத்திரைப்படம் ஒரு தேசபக்தி திரைப்படமாக கொடுத்து அனைவரையும் படக்குழு ஆச்சரியப்பட செய்துள்ளார்கள். இந்தநிலையில் இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் 400 கோடி வசூல் செய்திருக்கின்றது.

இதை தொடர்ந்து வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 550 கோடியை வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முதல் முறையாக படக்குழு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்கள். இதில் நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அப்போது தீபிகா படுகோன் பேசியதாவது, உண்மையாக கூற வேண்டுமென்றால் சாதனைகளை முறியடிக்க போகிறோம் என நான் நினைக்கவில்லை. ஒரு நல்ல திரைப்படம் உருவாக்கப் போனோம். உனக்கு மகிழ்ச்சி ஏற்படும் நபர்களுடன் பணியாற்று என ஷாருக்கான் என்னிடம் தெரிவித்தார்.

அவர் எனக்கு நம்பிக்கை அளித்து இருக்கின்றார். அதை அவருக்கு கூட தெரியாது. இந்த திரைப்படத்தின் வெற்றி ஆச்சரியம் அளிக்கின்றது. நாங்கள் பெருகிற அன்பு கூட இது போன்ற ஒரு படம் நிறைய கொண்டாட்டங்களை கொண்டு வர முடியும் என சொல்லும் போது நம்ப முடியாத அளவிற்கு இருக்கின்றது. ஒரு திருவிழா போன்று உணர்வு எனக்கு ஏற்பட்டு இருக்கின்றது. ரசிகர்கள் அனைவரின் அன்பை பார்க்கும்போது படம் அதற்கு தகுதியானது என தோன்றுவதாக தெரிவித்திருக்கின்றார்.