கும்பகோணம் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வேறொரு இளைஞரை கொலை செய்ததாக  வாக்குமூலம் அளித்திருக்கிறார். காணாமல் போன இளைஞர் முகமது அனாஸை கொலை செய்ததாக கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.  தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முகமது அனாஸை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம். கொலை செய்த பின் சில நாட்கள் கழித்து எலும்புக்கூடுகளை சுடுகாட்டில் வீசியதாக தகவல் தெரிவித்துள்ளார்.