தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஆறு நாட்கள் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.