அமைச்சரான பிறகு முதல் முறையாக உதயநிதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்துக்கு சென்றுள்ளார். அதாவது, நாகப்பட்டினம் திருக்குவளை இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி சென்றுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது “விடியலை நோக்கி என்ற பிரச்சாரம் 2021 தேர்தலில் தொடங்கிய போது இந்த வாசலில் தான் கைது செய்யப்பட்டோம். இப்போது இங்கு அமைச்சராக வந்திருக்கிறேன். முதல்வர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் மனு அளிக்கின்றனர். அதை செயல்படுத்த தொடர்ந்து உழைக்கிறோம் என்று உதயநிதி கூறினார்.