தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா கோல்ட், ஹிஜாவு, IFL, எல்பின் ஆகிய நிறுவனங்களின் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் IFL நிறுவனம் மட்டும் 6,000 கோடி மோசடி செய்துள்ளதாக ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஹிஜாவு நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்டோர் 89,000 பேர் என்பது தெரியவந்துள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் மீது 10,000 பேர் புகார் அளித்துள்ளனர்.