வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் வெள்ளைக் (ஸ்டாப்லைன்) கோட்டைத் தாண்டினால் 500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல், மதுபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் நடைமுறை ஏற்கவே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் வெள்ளைக் கோட்டை மீறுபவர்கள், சிக்னல் மீறுபவர்களுக்கு 500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர்.