மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்தமகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, மதுரை சத்யசாய் நகர் பகுதியிலுள்ள தன் வீட்டில் மகன் துரை தயாநிதி உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த நடிகரான பிரபு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து பேசியிருக்கிறார்.

இவர்கள் இருவரது சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு “சிவாஜியின் தீவிர ரசிகர் மு.க. அழகிரி. இதன் காரணமாக சிவாஜியின் மகன் என்ற முறையில் பிரபு அவரை நேரில் சந்தித்தார். ஆகவே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே” என்று அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.