தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தான் அஜித் குமார். இவரது 62வது படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. எனினும் சில காரணங்களால் விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியது. எனினும் ஏகே-62 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

இந்த நிலையில் ஏகே-62 படத்தின் தாமதத்துக்கு அஜித் தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் அஜித் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்து நடிக்க இருக்கும் படமும் ஹிட்டாக வேண்டும் என்பதற்காக கதையில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அஜித் மகிழ் திருமேனியின் கதையை திருத்தம் செய்ய அழுத்தம் கொடுக்கிறார் எனவும் படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.