இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை உடையவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் டி.ராஜேந்தர் மற்றும் பள்ளி குழந்தைகள் சேர்ந்து பாடிய வந்தே மாதரம் பாடல் 2 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.

இதனால் பள்ளி குழந்தைகளுக்கு டி.ஆர் சான்றுகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது அவர் பேசியதாவது, குழந்தைகளை தட்டிக்கொடுத்து வளர்க்க வேண்டும். தட்டிவிட்டு வளர்க்கக்கூடாது. எந்த விதையில் எந்த விருட்சம் இருக்கும் என்பது தெரியாது. அவர்களை உற்சாகத்தோடு ஊக்கம் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் அறிவுறுத்தினார்.