தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தல அஜித்தின் தந்தை சுப்ரமணியம் அண்மையில் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். அதன் பிறகு நேரில் செல்ல முடியாத பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்கள்.

அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் அஜித்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நடிகர் அஜித் அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதனால் தற்போது அஜித் அதிமுகவில் இணையலாம் என்று ஒரு தகவல் இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.