முக்கொம்பு சிறுமிக்கு காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை  செய்தது குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு  தீர்மானத்தை அதிமுக – காங்கிரஸ் கொண்டு வந்தது. அதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவரம்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்பு பெறாமலும், உயர் அதிகாரிகளுக்கு எந்த வித தகவலும் தெரிவிக்காமலும்,

GA புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து பல நாட்களாக பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவர் உடன் இணைந்து சென்று, சுற்றுலா தளத்திற்கு வருகை தந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி அந்த இளைஞரை தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு,  உடன் இருந்த பெண்ணை அந்த காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி,

அவரிடம் தவறான முறையில் நடந்து இருக்கிறார்கள். பின்னர் அந்த பெண் சத்தம் போட்டதால் அவரை காவலர் காரில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்கள். இதனை அடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் பேரில்,  அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த காவலர்களை விசாரித்த போது,  அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.

இங்கே எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுகிறபோது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னார்கள், அது உண்மையல்ல. அந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த காவல் நிலைய எஸ்ஐ உடனடியாக எஸ்பியிடம் தொடர்பு கொண்டு,  அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் GA புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, GA புரம் உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு,  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் குற்றம் இழைத்த காவலர் மீது கடும் தண்டனை வழங்க கூடிய பிரிவுகளின் கீழ் துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு,  இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில்..  குறிப்பாக பாலியல் வன்முறை வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி  இந்த அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.