அக்டோபர் 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆனது தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் ஆனது நிறைவடைந்திருக்கிறது. சட்டப்பேரவை தற்போது தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்து இருக்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட வேளாண்மை மண்டல திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல காவிரி விவகாரம் தொடர்பான தனி தீர்மானமும் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.