தமிழ்நாடு மொழி ஆய்வகத் திட்டத்திற்காக 6029 அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு அக்.25க்குள் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் பாட வேளைகளை உருவாக்கவும், பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரி செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு தூய்மையாகவும், தரமாகவும் உள்ளதா என தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது