தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார். இந்த படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை திரிஷா நேற்று தன்னுடைய 41-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.

நடிகைகள் பெரும்பாலும் பார்ட்டி வைத்து பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நடிகை திரிஷா வித்யாசமாக பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் தன்னுடைய தோழிகளுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் திரிஷா தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.