தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தின் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அண்மையில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ரஜினி மற்றும் ஞானவேல் இணையும் படத்தில் நடிகர் விக்ரமை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஞானவேல் சொன்ன கதை நடிகர் விக்ரமுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். ஆனாலும் ஏதோ சில காரணங்களுக்காக நடிகர் விக்ரம் இன்னும் ஓகே சொல்லாமல் இருக்கிறாராம். மேலும் நடிகர் விக்ரம் ஓகே சொன்னால் விரைவில் ஞானவேல் மற்றும் ரஜினி இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.