பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். தென்னிந்திய சினிமாவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மிருணாள் அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே தன் நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது நானி நடிக்கும் படத்தில் மிருணாள் நடித்து வருகிறார். இந்நிலையில் சர்வதேச அளவில் பிரபலமான திரைப்பட விழாவாக கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகர் மிருணாள் தாக்கூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது என்னுடைய திரை வாழ்வுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று மிருணாள் கூறியுள்ளார்.