தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இவர் தளபதி விஜயை‌ வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெய்லர் என்ற திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜெய்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறாராம். நெல்சன் சொன்ன கதை தனுஷுக்கு மிகவும் பிடித்து விட்டதால் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.