தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த வருடம் தன்னுடைய காதலர் சோகேல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை ஹன்சிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா அறிமுகமான நிலையில் இரண்டு வருடங்களில் பெரிய மனுசியாக மாறிவிட்டார். இதனால் ஹன்சிகாவின் அம்மா டாக்டர் மோனா மோத்வானி அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு தான் பெரிய மனுஷியாக்கிவிட்டார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதே செய்தி ஹன்சிகாவின் திருமணத்தின்போதும் பரவியது.

ஆனால் ஹன்சிகாவின் அம்மா மோனா அப்படி ஒரு ஹார்மோன் ஊசி இருந்திருந்தால் நான் அதை மார்க்கெட்டில் வாங்கி விற்று  பெரிய பணக்காரியாக மாறி இருப்பேன். அது போன்ற எந்த ஊசியும் கிடையாது. நாங்கள் பஞ்சாபி மக்கள் என்பதால் எங்களுடைய மகள்கள் சீக்கிரமாக வளர்ந்து விடுவார்கள் என்று கூறினார். தற்போது ஹன்சிகாவும் ஒரு பேட்டியில் ஹார்மோன் ஊசி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது ஒரு பிரபலமாக இருப்பதால் இது போன்ற செய்திகள் பரவத்தான் செய்யும். என்னுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுபவர்கள் தான் இப்படிப்பட்ட செய்திகளை பரப்புகிறார்கள். எனக்கு ஊசி என்றால் மிகவும் பயம். அதனால்தான் இதுவரை என் உடம்பில் ஒரு டாட்டு கூட போட்டது கிடையாது என்று கூறியுள்ளார்.