தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துவார். மக்கள் செல்வன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி செய்த உதவி குறித்து தற்போது பிரபல இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி கூறியுள்ளார்.

அதாவது பெப்சி தொழிலாளர்கள் 250 பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்கே செல்வமணி விஜய் சேதுபதியிடம் கூற தலா 50,000 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். இது போக மேலும் 30 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது. உடனே அந்த பணத்தையும் நடிகர் விஜய் சேதுபதி தன் உதவியாளர் மூலமாக பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க கொடுத்துள்ளார். இந்த தகவலை சமீபத்திய பேட்டியில் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.