அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் கடந்த 6-ம் தேதி பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் வணிக வளாகத்துக்கு வெளியே நடந்து சென்றவர்களில் 8 பேர் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யா என்பவரும் உயிரிழந்தார். இவர் ஹைதராபாத்தில் உள்ள சரூர் நகர் மாவட்ட நீதிபதி தட்டிக் கொண்டா நர்சி ரெட்டியின் மகள் ஆவார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா நடிகை சூர்யாவின் தீவிர ரசிகை என்பதால் அவருக்கு சென்னையில் உள்ள தன் வீட்டில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்துள்ளார். அதன்பிறகு ஐஸ்வர்யாவின் குடும்பத்தாரிடம் செல்போனில் பேசி அவர்களுக்கு நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் நடிகர் சூர்யா ஐஸ்வர்யாவின் போட்டோவை வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.