பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 25 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டின் தலைநகரான லிமாவிலிருந்து டம்ஸ் செல்லும் சுற்றுலா நகருக்கு 60க்கும் அதிகமானோர் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து ஆர்கனோஸ் நகரத்தில் இருக்கும் மலைகள் நிறைந்த சாலையில் சென்றது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து மலையிலிருந்து தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து நொறுங்கிப்போனது. இந்த பயங்கர விபத்தில் 25 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.