பாகிஸ்தான் நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 40 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரத்திலிருந்து கராச்சிக்கு இன்று காலையில் சென்ற ஒரு பேருந்தில் 48 பேர் பயணித்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா பகுதியில் பேருந்து சென்ற சமயத்தில், வளைவில் ஓட்டுநர் வேகமாக திருப்ப முயன்றிருக்கிறார். இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூணில் பலமாக மோதி பள்ளத்தில் விழுந்தது.

அதன்பிறகு, பேருந்து தீப்பற்றி எரிந்து 40 நபர்கள் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் மீதமிருந்த மூன்று பயணிகளை உயிருடன் மீட்டிருக்கிறார்கள்.