மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில்  வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து  மீட்பு பணியாளர் ஒருவர் கூறியதாவது, உயிரிழந்தவர்கள் தனிந்தாய் பிராந்தியத்தின் யெபியூ டவுன்ஷிப்பிற்கு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.