கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி கனிம வளத்தை ஏற்றி கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி ஒரு கட்டத்தில் இரண்டு கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனிம வளம் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.