கடலூர் மாவட்டம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் வலையில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியிருந்ததை பார்த்து மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். இது பற்றி கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, எப்போதும் கொம்பன் திருக்கை, புள்ளி திருக்கை, செந்திருக்கை ஆகிய திருக்கை மீன்கள் வலையில் சிக்கும். தற்போது வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கி இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மீன் 25 கிலோ எடை இருக்கிறது. இதனை பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளனர்.