தென்காசி அருகே அரசு கல்லூரியில் முனைவர் பட்டம் பயின்று வரும் மாணவிகளுக்கு துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அஜித். இவர் அத்துறையில் முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளார். அஜித் மாணவிகளிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஆய்வு படிப்பை முடிக்க முடியாதது என்று மிரட்டியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாணவி கேட்டுக்கொண்டார்.