தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு எழுத பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேர்வு கூட அனுமதிச்சீட்டு இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு துறையின் இணையதளத்தில் சென்று தங்கள் மாணவர்களின் தேர்வு கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கூட அனுமதிச்சீட்டில் கையொப்பம் பெற்று அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்கு சில நாட்கள் முன்பு அதனை மாணவர்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். இதனைப் போலவே பிளஸ் ஒன் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கூட அனுமதி சீட்டுகள் மார்ச் ஆறாம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.