மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஜால்னா என்ற பகுதியில் ஒரு தார் சாலை போர்வை போல் வரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் அப்பகுதியில் தார் சாலை போட்டுள்ளனர். அந்த தார் சாலை பாயை சுருட்டி வைப்பது போன்று கையோடு பேர்ந்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஊழல் செய்வதற்கும் ஒரு அளவே இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இது குறித்து அந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறார்கள்.