இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, ஒரே நேரத்தில் சிரிக்கவும் வியக்கவும் செய்கிறது. இந்த வீடியோவில், ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞர், கடைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பாக்கெட்டை திருட முயல்கிறார். மிகவும் புத்திசாலித்தனமாக அந்த பாக்கெட்டை எடுத்து ஸ்கூட்டரின் ஹூக்கில் தொங்கவிட்டு தப்ப முயன்ற அவர், அடுத்த கணமே சமநிலையிழந்து ஸ்கூட்டருடன் சாலையில் சறுக்கி விழுகிறார்.

விழுந்த பிறகு பயத்தில் அதே இடத்தில் பொருட்களை மீண்டும் சேகரிக்கத் தொடங்கிய திருடன், மீண்டும் ஸ்கூட்டரை பிடித்து ஓட முயற்சி செய்கிறார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன், அவரது சக்கரம் வழுக்கி மீண்டும் ஒரு முறை கீழே விழுகிறார். பின்பு, இந்த கதையை முடிக்கவேண்டியதுபோல், சாலையில் ஸ்கூட்டரை விட்டுவிட்டு வெறுங்கையுடன் ஓடிச் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும், நெட்டிசன்கள் பலரும் இதனை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Suviks Kumar (@unknown_5ukoon_04)

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் நையாண்டியாக கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றனர். “ஒரே நாளில் ஒருவருக்கு இவ்வளவு மோசமான விஷயங்கள் நடக்க முடியுமா?” என ஒருவர் கேள்வி எழுப்ப, மற்றொருவர் “இந்த திருடனை யாரோ கண்டிப்பாக சபித்திருப்பார்கள்!” என குறிப்பிட்டுள்ளார். unknown_5ukoon_04 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. திருட்டு தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், பொதுமக்களின் சிரிப்புக்கும் காரணமாகி விட்டது.