கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் பச்சைவால் நட்சத்திரம் சூரியனை கடந்து பூமியை நோக்கி வந்தது. நேற்று காலை பூமிக்கு மிக அருகில் நட்சத்திரம் தெரியும் என பலர் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகர் பகுதியில் நள்ளிரவு 12:30 மணி முதல் ஒரு சில இடங்களில் தெரிந்த பச்சைவால் நட்சத்திரத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேமராக்களில் படம் பிடித்தனர். இதனையடுத்து வரும் 4 மாதங்களுக்கு வெவ்வேறு கால நிலைகளில் இரவு நேரம் தெரிவும் இந்த பச்சை வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.