சென்னையில் உள்ள நீலாங்கரை தெருவில் வேகமாக வந்த காரால் காயமடைந்த மூன்று மாத காளைக் கன்று ஒன்று, ‘மிஸ்டர் அலெக்ஸ்’ என்ற பெயரில் ஒரு உயர்ரக கட்டிடத்தின் 28-வது மாடியில் தனது மீட்பாளர்களுடன் வாழ்ந்து வருவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த நிலையில் காணப்பட்ட இந்தக் கன்றை, அதன் உரிமையாளரான தேஜஸ்வினி எஸ். ரங்கன் என்ற கட்டிட வடிவமைப்பாளர் மீட்டு, தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
View this post on Instagram
அப்போது அந்தக் கன்றுக்கு ஒரு மாதமே ஆகியிருந்தது. முறையான மருத்துவ பராமரிப்பு மற்றும் அன்பால், இந்தக் கன்று பலமடைந்து, அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறியது. வீட்டில் உள்ள நாய்களுடன் மகிழ்ச்சியாக பழகுவதாகவும் உரிமையாளர் தெரிவித்தார். வீடியோவில், மிஸ்டர் அலெக்ஸ் மிகவும் கனிவானவனாகவும், அரவணைப்பை விரும்புபவனாகவும் இருப்பதாக உரிமையாளர் சாய் விக்னேஷிடம் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியது. சிலர் ஆச்சரியத்தை வெளிப்படுத்த, மற்றவர்கள் “இவன் கழிவறை பயிற்சி பெற்றவனா?” என்று கேள்வி எழுப்பினர். “இது மிகவும் அழகான காட்சி!” என்று ஒருவர் கருத்து தெரிவித்தார், மற்றொருவர், “எல்லா விலங்குகளுடனும் ஒரு பண்ணையில் வாழ விரும்புகிறேன்!” என்று கூறினார்.
