திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலி குமாரபுரத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
பள்ளியில் திடீர் தீ விபத்து… துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.…
Read more“ஹோம் ஒர்க் செய்யலையா?…” ஆசிரியர் திட்டியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன்(15) 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முத்துக்கிருஷ்ணன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது.…
Read more