மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பெஷாவர் போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலை தாக்குதல் நடத்தியவர்” தன்னைத்தானே வெடிக்கச் செய்ததில் 17 பேர் பலியாகினர். மேலும் 80 பேர் காயமடைந்தனர். அதாவது, திங்கட்கிழமை மதியம் பெஷாவரின் காவல் கோட்டப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலைத் தாக்குதல்காரர்” தன்னைத்தானே வெடிக்கச் செய்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 80 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபர் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்தபோது, அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார். காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/Imranist_Hoon/status/1619979426720264192
🚨Breaking:
Inside mosque after Blast in Police lines Peshawar during Namaz.#Peshawar | #Pakistan | #PeshawarBlast | #MosqueBlast pic.twitter.com/7xHywXr6Cp— Hassan Bashir Awan (@moumkts1) January 30, 2023