நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி வாரியாக புதிய பணியிட விவரங்கள் அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாக தெரிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.