தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்வாரியம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதி இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நடைபெற்று வருகின்றது. தற்போது இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரி பார்க்கும் வசதியை மின்வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் கைப்பேசி எண்ணை மின் நுகர்வோர் கொடுத்து மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.