சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 21 அன்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனின் முக பாவனைகள் அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளன.

சபையில் “கரூர் கம்…” என்று மட்டுமே குறிப்பிடும் போது அதில் என்ன தவறு என்ற கேள்வியும், சம்பந்தப்பட்ட நபர் மௌனமாக இருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எதற்காக தேவையில்லாமல் தலையிட்டு வாதாடினார் என்ற விவாதமும் எழுந்துள்ளது.

மேலும், அமைச்சரின் தரப்பில் இருந்து வந்த அதிரடியான பதிலடி பார்வையாளர்களை ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்ததுடன், பள்ளி மாணவர்களின் சண்டை போலவும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

“>

 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதற்குக் காரணம் என்ன என்ற சந்தேகமும், எதிர்காலத்தில் இது போன்ற சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.