சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில், விவசாயிகளின் நலன் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கும், அவை முன்னவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியுள்ளது.
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கக் கோரி நான்கு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்:
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்த அவைக்கு விளக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்று கூறிவிட்டு, தற்போது பகுதி அளவிலான தள்ளுபடி மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது ஏன்?
காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் குருவை சாகுபடி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு எப்போது உரிய நிவாரணம் வழங்கும் டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவித்து, அங்குள்ள விவசாயிகளுக்குத் தகுந்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், கர்நாடக அரசு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தலைமையில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து நிதி மற்றும் அனுமதி கோருவது குறித்தும், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தின் உரிமை என்று வரும்போது அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி டெல்லிக்குக் குழுவாகச் சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விடுத்திருந்ததை மீண்டும் அவையில் நினைவுபடுத்தினார்.
அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடிப் பதிலடி:
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு உடனடியாக குறுக்கிட்டுப் பதிலளித்த அவை முன்னவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். அவர் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் தாம் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்களை விட்டுவிட்டு, சம்மந்தமில்லாத பல அரசியல் விஷயங்களைப் பேசி வருகிறார்.
இந்த அவையின் நீண்ட கால நடைமுறை மற்றும் விதிகளுக்கு இது முற்றிலும் முரணானது. விவசாயிகளின் பிரச்சினை மிக முக்கியமானது என்பதற்காகவே அவருக்குப் பேசுவதற்குத் தாராளமாக நேரம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த முக்கியமான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அரசியல் மேடைப் பேச்சாக மாற்றுவது முறையல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Chennai, Tamil Nadu: Intervening during Leader of the Opposition Udhayanidhi Stalin’s Calling Attention Motion, Leader of the House and Minister K.A. Sengottaiyan says, “The Leader of the Opposition is moving away from the points mentioned in his Calling Attention Motion and is… https://t.co/ACNui3Jcfa pic.twitter.com/iiLXyTcBXz
— IANS (@ians_india) August 7, 2026
“>
விவசாயிகள் நலன் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சி அமைச்சரின் இந்த அதிரடியான மறுப்பு சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
